உஷா விநோதனைப் பார்த்து வீறிட்டாள். “நீ சொன்ன மாதிரியே அந்த நம்பருக்கு லாட்டரில அஞ்சு லட்சம் அடிச்சிருச்சுடா!”
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த விநோதன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் ஒரு சிறு புன்னகை மட்டும் தந்து விட்டு சூப் குடிக்க ஆரம்பித்தான்.
அவள் உற்சாகத்தில் தொடர்ந்து கிறீச்சிட்டாள். “சொன்னதுதான் சொன்னே ஜாக்பாட் நம்பர் என்னன்னு சொல்லியிருந்தா முப்பது கோடி கிடைச்சிருக்குமே?”
“தெரிஞ்சா சொல்லியிருப்பேன்!”
“சரி, வேறென்ன தெரியும் சொல்லு.”
ஜன்னலை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், “ஆங்… காம்பவுண்ட் சுவருக்குப் பக்கத்தில் மாமரம் இருக்கே… நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு வெளியே போய்ப் பார். அந்த மரத்திலிருந்து கரெக்டா ஆறு மாம்பழங்கள் பழுத்துத் தரையில் விழுந்து கிடக்கும். ஏழு நாப்பத்தியேழுக்கு அதிலே ஒரே ஒரு மாம்பழத்தை மட்டும் தினமும் இந்த வழியா ஸ்கூல் பசங்களை ஏத்திட்டுப் போற ஆட்டோ டயர் நசுக்கிட்டுப் போகும்.”
“என்ன ஜோக்கா?”
“நோ. ஐயாம் சீரியஸ்.”
மறுநாள் காலை உஷா திடுக்கிட்டுப் போனாள். அவன் சொன்னது துல்லியமாய் நடந்திருந்தது.
“ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ். இது மாதிரி உப்புச் சப்பில்லாத சின்னச் சின்ன விஷயம்தான் கணிச்சு சொல்வியா? பெரிசா சீரியஸா ஒண்ணு சொல்லு.”
அவன் அவளை உற்றுப் பார்த்து விட்டு - “சீரியஸா… ம்ம்ம்….” என்று சில விநாடிகளுக்குக் கண்ணை மூடி யோசித்தான். “எட்டாம் தேதி மதியம் ஒரு மணி சுமாருக்கு தொழில்துறை அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துருவார்.”
“வாட்? திஸ் ஈஸ் ரியலி சீரியஸ். நாம உடனே இதை அமைச்சகத்தில் யாருக்காவது சொல்லணும். அமைச்சரைக் காப்பாத்தணும்.”
அவளைக் கையமர்த்தினான். “யாரும் உன்னை நம்ப மாட்டாங்க. தவிர நடக்கப் போறதை உன்னால தடுக்க முடியாது.”
“வாட் டு யூ மீன்? அப்ப உன்னால தடுக்க முடியுமா? நீ நினைச்சா அவரைக் காப்பாத்த முடியுமா?”
“நோ. யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது. அது என்ன அது… ஆங் விதி. எஸ்… விதின்னு வெச்சுக்கலாம்.”
“ஐ நோ… நீ கப்சா அடிக்கிறே. அதான் விதியை மாத்த முடியாதுன்னு ஜகா வாங்கறே. லாட்டரிலயும், மாங்கா மரத்திலும் சும்மா அடிச்சு விட்டது தற்செயலா நடந்திருச்சு. அப்படித்தானே?”
“சரி அப்படியே வெச்சுக்க.” என்று சிரித்தான்.
எட்டாம் தேதி டி.வியில் வயல்காட்டில் விழுந்து நொறுங்கிக் கிடந்த ஹெலிகாப்டரின் இடிபாடுகளுக்கிடையே இருந்து ரத்தமும், சதையுமாக தொளதொளவெனத் துவளும் அமைச்சரின் உடலை மீட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
உஷா சில்லிட்டுப் போய் அமர்ந்திருந்தாள்.
“விநோதன், ஐ தின்க் யூ காட் சம்திங். உனக்கு ஏதோ சக்தி கிடைச்சிருக்கு. உன்னால எதிர்காலத்தைக் கணிக்க முடிகிறது. ஏதாவது ஷாக் அடிச்சதா? மண்டையில அடிபட்டதா? எப்படி... எப்படி இதெல்லாம்? நீ ஒரு ஞானிடா.” அவள் பதட்டத்தோடு அவனைப் பார்த்தாள். “ப்ளீஸ் யூஸ் திஸ் திங் டு பாசிட்டிவிட்டி. உன்னோட இந்த அபூர்வ சக்தியை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்து.”
“நான் ஞானி எல்லாம் இல்லை. ஜஸ்ட் விஞ்ஞானி. இனிமே நடக்கப் போறது இல்லை… ஏற்கெனவே நடந்ததைப் பார்த்துத்தான் இதெல்லாம் சொல்கிறேன். அதனாலதான் எதையும் மாத்த முடியாதுன்னு சொல்றேன்.”
“குழப்பமா இருக்கு.”
“சரி உனக்குப் புரியும்படி சொல்றேன்.” அந்த வீட்டின் பால்கனியிலிருந்து தெரியும் குழந்தைகள் பூங்காவைக் காட்டினான். “அதோ அங்கே உனக்கு என்ன தெரியுது?”
“ஒரு குழந்தை பார்க்ல சறுக்கி விளையாடிட்டிருக்கு.”
“அது எப்படி உனக்குத் தெரியும்?”
“என்ன மடத்தனமான ஒரு கேள்வி? நான்தான் என் ரெண்டு கண்ணாலயும் அதைப் பார்க்கிறேனே! ஏன் நீயும்தான் பார்க்கிறே!”
“அதாவது அந்தக் காட்சி ஒளியாக குறிப்பிட்ட வேகத்தில் பயணிச்சு உன்னையும், என்னையும் ஒரே சமயத்தில் வந்தடைகிறது. அதனால் நானும் நீயும் ஒரே காட்சியைப் பார்க்கிறோம். சப்போஸ் என்னிடம் மட்டும் அந்த ஒளி இரண்டு மடங்கு வேகத்தில் வந்து சேர்வதாக வெச்சுக்க. உனக்கு ஒரு செகண்டில் தெரியற காட்சி எனக்கு அரை விநாடியிலே தெரிஞ்சிடும். இப்ப சிரிச்சு விளையாடிட்டிருக்கிற அந்தக் குழந்தை அடுத்த அரை விநாடியில் சறுக்கிலிருந்து விழுந்து அழப்போகிறதை உனக்கு முன்னால நான் பார்த்துருவேன். ஸோ, நான் நடக்கும்ன்னு சொன்னது நடந்திரும். புரியுதா?”
“ம்ம்ம்.. புரியற மாதிரி இருக்கு.”
“வானத்தில் தினமும் நீ பார்க்கிற நட்சத்திரங்களில் பலவும் எப்பவோ சாம்பலாகிப் பொசுங்கிப் போனவைதான். ஆனா ஒளி அண்ட வெளியில் பயணிச்சு காட்சியா உன்னை வந்து அடைய பல வருஷம் தாமதமாகிறது. அவை சாம்பலாகிப் போற காட்சி உன்னை வந்தடையவே பல்லாயிரம் வருஷங்களாகும்.”
உஷா தயக்கமாய் ஆமோதித்தாள். “எஸ்… புரியுது. ஆனா, ஐன்ஸ்டீன் தியரிப் படி நம்ம யுனிவர்ஸ் மொத்தமும் ஒளியின் வேகம் மாறவே மாறாது. ஆனா உனக்கு மட்டும் எப்படி…?”
விநோதன் சட்டையைக் கழற்றினான். அவன் தொப்புளுக்கு மேலே ஒரு கண்.
“நான் பார்க்க உன்னை மாதிரியே இருக்கேன். ஆனா வேற யூனிவர்ஸிலிருந்து வந்திருக்கும் ஒரு விஞ்ஞானி நான். எங்கள் யூனிவர்சின் இயற்பியல் விதிகள் இங்கிருக்கும் விதிகளுக்குப் பொருந்தாதவை. ஒளியை விநாடிக்கு பல கோடி மைல் வேகத்தில் கடத்தும் இயந்திரங்களைக் கண்டு பிடிச்சிருக்கோம். ஒளியை விட வேகமாப் பயணிக்கும் உபகரணங்களையும் படைச்சிருக்கோம். இந்த மூன்றாம் கண் வழியே என் சக விஞ்ஞானிகள் இந்த உலகத்தைப் பார்த்துப் பதிவு செய்கிற விஷயங்கள் எனக்கு வந்து சேர்கிறது. அந்த டேட்டாவை வேலிடேட் பண்ற பணிக்காக நான் இங்கே வந்திருக்கிறேன்.”
உஷா திகிலுடன் அவனைப் பார்த்தாள். “அப்படின்னா?”
“எஸ். நீ எப்போதோ இறந்து விட்டவள்தான்!” ⬛️
சத்யராஜ்குமார்
14 பிப் 2023
என்ன மாயமான நடை!
ராஜா, தொடர்ந்து எழுதுங்கள்
1999ல் டேனிஷ் இயற்பியல் நிபுணர் லெனே ஹாவ்
ஒளியின் வேகத்தைக் குறைத்துக் காண்பித்தார்.
வெளிச்சத்தை நிறுத்தியது மட்டும் அல்லாமல்,
அதை சுற்றி நகர்த்தி, அரை நிமிடத்திற்கு உருவகப்படுத்தினார்.
"நாம் வெளிச்சத்தைப் பிடித்துக் கொள்ளலாம்,
அதை சுற்றி நகர்த்தலாம்
அல்லது சேமித்து வைக்கலாம்.
நாம் உண்மையில் அதை கையாள முடியும், “
என்பதைச் செய்து காண்பித்தார்.
வழக்கமாக வினாடிக்கு 300,000 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் ஒளியை
ஒரு மழை நாளுக்கு நிறுத்திவிட்டு பேக் செய்ய முடியும் என்பது வியக்கத்தக்கதாகத் தோன்றலாம்.
லேசர்கள், குளிரூட்டப்பட்ட அணுக்கள்,
மற்றும் பிற கருவிகள் மற்றும் நுட்பங்களுடன்
பல ஆண்டுஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகு
ஒளியைக் கட்டுப்படுத்திக் காண்பித்தார்.
ஆய்வகத்தில் ஹாவ் பயன்படுத்திய போஸ்-ஐன்ஸ்டீன் ஒடுக்கத்தை,
அதாவது, முழுமையான பூஜ்ஜியத்திற்கு அருகில் குறைந்த வெப்பநிலையை மைனஸ் 273.15 டிகிரியில் எரிச்சலூட்டும் நிலையில் அணுக்களைக் குளிர்விப்பது.
"வெப்பநிலை முழுமையான பூஜ்ஜியத்தை விட ஒரு பில்லியன் டிகிரிக்கு மேல் குறைந்துள்ளது" என்று ஹாவ் கூறுகிறார்.
ஒளி சுருக்கப்பட்டது
ஒரு லேசருடன் ஹாவ்
ஒரு ஒளியின் பீம் - ஒரு ஒளி அலை -
போஸ்-ஐன்ஸ்டீன் கன்டென்சேட் வழியாக. கோடன்ஸ்டேட்டின் குளிர் சூழல் ஒளியை குறைப்பது மட்டும் அல்லாது,
அதை சுருக்கவும் செய்கிறது.
லேசர் ஒளி ஜோடி செய்வது சிறப்பு
கண்டெஸ்டேட் உள்ளே கூப்லிங் லேசர் இருந்து
ஒளி ஒரு கிலோமீட்டர் நீளத்தில் இருந்து 0.02 மில்லிமீட்டர் மட்டுமே சுருக்கப்பட்டுள்ளது.
“போஸ்-ஐன்ஸ்டீன் கண்டன்சேட்டின் உள்ளே ஒளி அலை வந்தவுடன்,
நாங்கள் லேசரை அணைத்து விடுகிறோம்.
ஒளி மறைந்தாலும், அது அணு மேகத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தை விட்டுச் செல்கிறது,” என்று ஹாவ் கூறுகிறார்.
இந்த செயல்முறை
ஒரு வகையான ஒளியை உருவாக்குகிறது - ஒரு முத்திரை.
அத்தகைய ஒரு முத்திரையைப் பயன்படுத்தி,
ஒளி அலையை சேமிக்க மற்றும் அரை நிமிடம் வரை நகர்த்த முடியும் என்பதை ஹாவ் செய்து காண்பித்தார்.
எனவே, ஒளியைக் கையாள முடியும் என்கிறார்.
ஒளி அலையை எப்படி உங்களால் கையாள முடியும்?
ஒளியின் நிறத்தை மாற்ற முடியுமா?
நீங்கள் ஒளியின் நிறத்தை மாற்ற முடியும்
நாம் எதற்காக இதைப் பயன்படுத்தலாம்?
”இந்த நோக்கம் அடிப்படை ஆராய்ச்சி,
அதாவது, இயற்கை பற்றி புதிய தரவுகளைக் கற்றல். நீண்ட காலத்தில்,
பாரம்பரிய தகவல் மற்றும் குவாண்டம் தகவல் இரண்டு பகுதிகளிலும் தகவல் செயலாக்கம் போன்ற பகுதிகளுக்கு நாம் பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்," என்று ஹாவ் கூறுகிறார்.
ஒளியைக் கையாளுதல் மற்றும் சேமித்தல்
குவாண்டம் கணினிகளின் வளர்ச்சிக்கு ஒரு படி என்கிறார்.
அருணகிரி
16.02.2023
FB Arunagiri Sankarankovil